Training for Child welfare Police officers..

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS அவர்களின் தலைமையில், கூடுதல் காவல் துறை இயக்குநர் (Headquarters) திருமதி.சீமா அகர்வால் IPS அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இளம் சிறார் நீதிச்சட்டம், பாலியல் குற்றங்களிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகளுக்காக இதர சட்டங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் துணை ஆணையாளர் திருமதி. H.ஜெயலஷ்மி அவர்கள் மேற்பார்வையில் குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு, POCSO Act 2012, JJ Act 2015, Prohibition of Child Marriage Act, Prohibition of Child Labour Act ஆகிய சட்டப்புத்தகங்கள், CWPO Badges, Flash Cards மற்றும் Awareness Posters ஆகியவைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் துறை, சிறுவர் நீதிக்குழுமம், குழந்தைகள் நல கமிட்டி, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகிய அனைத்து துறையினருக்கும் காவல் துறையின் சார்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நினைவுப் பரிசை வழங்கி சிறப்புரையாற்றினார்.

1 / 1

1.