தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சர்வதேச சான்று

Police Magazine(TamilNews Group): சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு British Standards Institution வழங்கிய ISO 27001:2013 சர்வதேச தரச்சான்றை தமிழக முதல்வர் முனைவர் மு க ஸ்டாலின் அவர்கள் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) முனைவர். திரு சைலேந்திரபாபு IPS அவர்களிடம் வழங்கினார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறை நவீன ஒருங்கிணைந்த தரவுத் தளம் மற்றும் இதர தொழில்நுட்பக் கட்டமைப்புகளுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன தரவுத் தளத்தில் இதுநாள் வரை 1.12 கோடி அவசர கால அழைப்பு விவரங்கள் மற்றும் 14.5 லட்சம் ‘காவலன் செயலி’ பயன்படுத்துவோரின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த தரவுத் தளத்தின் தகவல்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இச்சான்று இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு காவல்துறையின் மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டிற்குப் கொடுக்கப்பட்டது தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைகிறது.

1 / 1

1.