Chennai Metropolitan Police Commissioner's attempt to people complaint in patrol vehicle

Police Magazine(TamilNews Media Group): சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS அவர்கள் உத்தரவின்பேரில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் உள்ள Main Patrol Vehicle, Additional Patrol vehicle, Gypsy Patrol, Special Patrol, Amma Patrol என சென்னை பெருநகரில் 355 சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களில் புகார் அளிக்கும் திட்டத்தை ஆணையர் துவக்கி வைத்தார். சென்னை பெருநகரிலுள்ள 124 காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் தினசரி காலை 11.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையிலும், பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் அறிவிக்கப்பட்ட இடங்களில் உரிய நேரப்படி நிறுத்தப்படும். காவல் நிலையம் வர இயலாத சூழ்நிலையில் ரோந்து வாகனங்களில் புகார்களை கொடுத்து புகார் மனு ஏற்பு சான்று (CSR) பெற்றுக் கொள்ளலாம். மேலும் Search Light, Flask போன்ற தேவையான பொருட்கள் அனைத்து ரோந்து வாகனங்களுக்கும் ஆணையர் வழங்கினார்.

1 / 2

1.

Next