தற்காப்புக்கு கொலை செய்த பெண்ணை விடுவித்த SP வருண்குமார் IPS

Police Magazine(TamilNews Media Group): திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வழுதிகைமேடு ஏரிப்பகுதி அருகே சடலம் ஒன்றை கண்டு காவல்துறைக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த E3 மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் ஏரி பகுதிக்கு அருகே உள்ள மீன் பண்ணையில் பணிபுரிந்து வரும் அமுதா பூங்காவனம் தம்பதியினரின் மேல் சந்தேகம் வலுத்தது. தொடர் விசாரணையில் இறந்துபோன வட மாநிலத்தைச் சேர்ந்த அந்த நபர் அமுதாவிடம் தவறாக நடந்து கொண்ட தால் தற்காப்புக்கு தன்னை காத்துக்கொள்ள கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தற்காப்புக்காக இந்த கொலை நிகழ்ந்ததால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் IPS அவர்கள் சட்டப்பிரிவு 100-ன் கீழ் அந்த பெண்ணை விடுதலை செய்திருக்கிறார். இந்த சம்பவத்தினால் எஸ்.பி வருண்குமாருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. இதேபோன்று ஒரு சம்பவம் சோழவரத்தில் நடந்து, இதே சட்டப்பிரிவின் கீழ் அந்தப் பெண்ணும் முன்னாள் எஸ்.பி அரவிந்தன் அவர்களால் விடுவிக்கப்பட்து குறிப்பிடத்தக்கது.

1 / 1

1.