கடமையில் கண்ணியம் போலீஸ் மேகஸின் சார்பாக நேரில் சென்று வாழ்த்து..

இராயபுரம் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் அரசு தடுப்பு வேலி அமைத்து, அப்பகுதி மக்களை கண்காணிக்கும் பொருட்டு காவல்துறை சார்பாக பணி அமர்த்தப்பட்டிருக்கும் "உதவி ஆய்வாளர் மனோகர்" அப்பகுதியில் சிறப்பான காவல் கடமையாற்றி வருகிறார். நோய் பாதித்த இடங்களில் மாநகராட்சி சார்பில் கை அலம்பும் நீர்த்தொட்டி வைக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி அதில் தண்ணீர் ஊற்றி பராமரிக்க தவறியதால். காவல் பொறுப்பிலிருக்கும் மனோகர் தொட்டியை தினசரி தூய்மை செய்து, தண்ணீர் நிரப்பி மக்கள் பயன்பாட்டிற்கு உதவினார். பாதித்த இடங்களில் வெளியே மற்றும் உள்ளே போகும் மக்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் கிருமிநாசினியை கையில் பூச வலியுறுத்தினார். முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு முககவசம் கொடுத்து உதவினார். காவல் கடமையில் கண்ணியமிக்க இத்தகையவரை தமிழ் நியூஸ் மற்றும் போலீஸ் மேகஸின் சார்பாக நேரில் சென்று பாராட்டு தெரிவித்தோம்.

1 / 1

1.